பிரதான செய்திகள்

 


திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.


இக்குண்டு தாக்குதல் நேற்றிரவு (14)7.00 மணியளவில்  நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் உயிர்ச்சேதங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் இடம் மாத்திரமே சேதமாகிவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

காலை 8 மணி தொடக்கம் 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும் குறித்த வைத்தியசாலைக்கு 
07 மணியளவில் பெட்ரோல் குண்டு தாக்குதல் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


 


இலங்கை வரலாற்றில் முதல் முறையாக  ஆளுனரின் ஏற்பாட்டில் கேரள செண்டை மேளம் கலைஞர்களின் கலை நிகழ்வு-


தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுறை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட பூஜைகளுடன்,கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்  சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம் மிக சிறப்பாக நடைபெற்றது.


சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம் அருள்மிகு பத்தரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து கேரளா செண்டை மேளம் முழங்க, பரதநாட்டிய கலைஞர்களின் நடன நிகழ்வு,குதிரையாட்டம், பறவையாட்டம்,கோலாட்டம் உட்பட  பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற நகர்வலத்தில்  பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.

அருள்மிகு பத்தரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர்பவனியுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் நடை பவனியில் கலந்துகொண்டார்.

கோணேஸ்வரரின் இறுதிநாள் நகர்வலத்தில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்காக  ஆளுநரின் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல், தேநீர்,பிரசாதங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இப்பெருவிழாவில் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல்  அமைச்சர் ஜீவன் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நலன்புரி அமைப்பின் செயலாளர் குகதாசன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்,அரசியல் தலைமைகள்,அரச உத்தியோகஸ்தர்கள்,கலைஞர்கள்,சிவில் அமைப்பினர்கள் உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.

\


 


திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மொட்டை காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


செம்பி மொட்டை அரசுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது இன்று (21) யானை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு யானையின் தாக்குதலினால்  உயிரிழந்தவர் ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யாகூப் (68வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட காட்டுப் பகுதிக்குள் சென்று மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானை தாக்கி விழுந்து  கிடந்த நிலையில் விழுந்து கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள வயல் உரிமையாளரான அவரது மகன் விழுந்து கிடந்த தந்தையை தூக்கிக் கொண்டுவந்து யானை மின் வேலிக்கு அருகில் கொண்டு வரும்போது உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்
வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.


திருகோணமலை மாவட்டத்தில்  பல்கலைக் கழகத்துக்குத்  தெரிவாகி பட்டப் படிப்பை தொடர பண வசதி இல்லாத தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று (14) நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.


திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தினால் மாவட்ட கிளை அலுவலகத்தில் 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்துக்கான நிதியுதவி திருகோணமலை மாவட்ட
நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.குகதாஸனினால்  வழங்கி வைக்கப்பட்டது.



திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 65 மாணவ, மாணவிகளுக்கு இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி பண வசதி இன்மையால் பட்டப் படிப்பை தொடர முடியாத நிலையிலும், தந்தையை இழந்து கல்வியை தொடர முடியாத நிலைமையில் எதிர்காலத்தில் நாட்டிற்காக சமூக நோக்குடன் போராடக்கூடிய இளைஞர் யுவதிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சிறந்த கல்வியைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் இன்னும் கல்வி மான்களை உருவாக்க வேண்டும் எனவும் அதற்காகவே பல்கலைக்கழக மாணவ மாணவிகளை தெரிவு செய்துள்ளோம் எனவும் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாஸன் இதன் போது தெரிவித்தார்.

 

 இந்நிகழ்வில் நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.குகதாசன், துணைத் தலைவர் டொக்டர் என். சரவணபவன், பொருளாளர் திரு. இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் இதற்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இதற்கான  நிதி உதவியைக்  கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.









திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு திறந்துவிடப்பட்டமையால்  வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, சேனையூர்,வட்டவன், வாழைத்தோட்டம் கல்லடி, முத்துச்சேனை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் பரவியுள்ளது.


தற்போது கனமழை பெய்து வருவதினால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதினாலும், மாவிலாறு திறந்து விடப்பட்டுள்ளதால்  வெருகல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 168 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.


அத்துடன் 120 குடும்பங்களைச் சேர்ந்த 341 பேர் வெருகலம்பதி இந்து மகாவித்தியாலயத்திலுள்ள நலன் புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 கிண்ணியா- உப்பாறு வீதி தடைபட்டுள்ளது. 139 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற் படையினரின் உதவியுடன் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


மேலும் சேறுவில- ஸ்ரீ மங்களபுர பகுதியில் பட்டு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.

அத்துடன் வெருகல் பிரதேசத்திலுள்ள விவசாய நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக வேலாயுத விவசாய சம்மேளனத்தின் தலைவர் கனகசூரியம் உதயகுமார் குறிப்பிட்டார்.

இதே வேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் இருப்போருக்கு சுகாதார வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,
வெருகல் பிரதேச செயலகம், பாதுகாப்புப் படையினர் மக்களுக்கான உதவி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனையும் குறிப்பிடத்தக்கது.







 




யாழ்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத்தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை இன்று (01)  பிரசவித்துள்ளார். 


24 வயதான மேற்படி தாயார் திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.


அதன் பின்னர் இந்த தாயார் கரப்பத்திற்க்கு முன்னரும் கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில் இன்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார்.


மகப்பேற்று வைத்திய நிபுணர் சிவராஜா சிஜெதரா அவர்களின் மருத்துவக்குழுவனரே மேற்படி தாய்க்கு சிகிச்சை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  மாகாண வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 48 ஆயிரத்து 223 மில்லியன் நிதி ஒதுக்கீடு ஆவணத்தில் கையொப்பம்!

-101 நலதிட்டங்களும் ஆரம்பித்து வைப்பு-


2024ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண வளர்ச்சி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திகளுக்காக  மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 48ஆயிரத்து 223 மில்லியன் (48,223,000,000.00) ரூபா ஒதுக்கீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தில் ஆளுநர் இன்று கையொப்பமிட்டார்.


இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக இன்று 101 நலத்திட்டங்களையும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


முதலமைச்சின் அமைச்சு மற்றும் உள்ளூராட்சி மன்றம் , கிராமிய அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில், விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து ஆணையம்,சுற்றுலா பணியகம்,

கட்டிடத் துறை வீட்டுவசதி ஆணையம்,மாகாண திட்டமிடல் செயலகம், மாகாண பொது நிர்வாகம்,கூட்டுறவு அபிவிருத்தி மீன்பிடி அமைச்சு,கல்வி மற்றும் கலாச்சார, முன்பள்ளி கல்வி பணியகம்,விளையாட்டு அமைச்சு, சுகாதார மற்றும் சுதேச மருத்துவத் துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் சமூக சேவைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சுகளுக்காக 101 நலத்திட்டங்கள் ஆளுநரால்  இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget