உங்களுடைய விளம்பரங்களை குறைந்த விலையில் விளம்பரம் செய்ய அழையுங்கள்.
0718664792
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் காணி தகராறில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
(பதுர்தீன் சியானா )
(அப்துல்சலாம் யாசீம்)
ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த அபாய முகாமைத்துவ பொறிமுறை தொடர்பான ஆளுமை விருத்தி செயலமர்வு இன்று (09) திருகோணமலயில் இடம்பெற்றது.
அனர்த்தத்தின் போது ஊடகவியலாளர் பொதுமக்களை தங்களது உயிர் உடமைகளை பாதுகாக்கும் நோக்கில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இதன்போது தெளிவூட்டப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை. வளிமண்டலவியல் திணைக்களத்தின் செயற்பாடுகளும் கடமைகளும், நீர் பாசன திணைக்களத்தின் பொறிமுறை மற்றும் வெள்ள அனர்த்தத்தின் போது நீர்ப்பாசன திணைக்களத்தின் கடமைகள், பொறுப்புக்கள் அனர்த்த அபாயத்தை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.என்.ஜயவிக்ரம அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி, விழிப்புணர்வூட்டல் பிரிவின் பணிப்பாளர் சுகத் திஸ்ஸாநாயக, திருகோணமலை மாவட்ட உதவி பணிப்பாளர் கே.சுகுணதாஸ். வேல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.ரவீந்திரன் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் டுலாரி பெர்ணான்டோ என பலரும் கலந்து கொண்டனர்.
(அப்துல்சலாம் யாசீம்- ஹஜ்ஜி முகம்மட்)
திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இன்று (12) கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
(அப்துல்சலாம் யாசீம்)
கொழும்பில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக திருகோணமலை ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கே திருகோணமலை ஊடகவியலாளர் சங்கம் இவ்வாறு தமது கண்டனத்தை வெளியிடப்பட்டுள்ளது.