பிரதான செய்திகள்

 


         (அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-கோணேஷபுரி  பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் தாயும் மகளும் வால்வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (01)  மாலை இடம் பெற்றுள்ளது.

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவசர சத்திர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு வால்வெட்டுக்கு இலக்கான பெண் நிலாவெளி -கோணேஷபுரி SLRC  வீட்டு திட்டத்தில் வசித்து வரும் எஸ். சந்ரா ரஜினி (50 வயது) எனவும் தெரிய வருகிறது.

இதேவேளை குறித்த பெண்ணின் மகளான ஸ்ரீதரன் சந்திரிகா (30வயது) என்பவர் தாயை வாளால் வெட்ட முற்பட்டபோது  தடுக்க சென்றமையினால்  காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் துண்டிக்கப்பட்ட கையை பொருத்துவதற்காக அவசர அம்பியூலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அத்துடன் கைகலப்புடன் தொடர்புடைய பெண்ணொருவர் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை குறித்த வால்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 



               

                ( பதுர்தீன் சியானா)


தடைகள் இன்றி விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (31) இடம் பெற்ற கலந்துரையாடலையடுத்து மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட போது அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதி உதவியுடன் சியாப் என்றழைக்கப்படும் கால நிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் 29 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.


கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம், விவசாய சங்கத்தின் உதவியுடன் நாவற்குளம் என்ற குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தினை  பார்வையிடுவதற்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேரடியாக விஜயம் செய்து விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள எவ்வித தடங்களும் ஏற்படாதவிடத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.

கடந்த யுத்த காலத்தின் போது விவசாயம் செய்யப்பட்டு வந்த தமது காணிகளை வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான காணியென கூறி  எல்லை கற்களை போட்டு வருவதாகவும் இதனால் ரொட்டவெவ-மிரிஸ்வெவ விவசாயிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனை தீர்த்து வைக்குமாறும் விவசாய அமைச்சரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


இக்கள  விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரல. கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ்' சியாப் திட்டத்தின் பிரதி  திட்டப்பணிப்பாளர் டொக்டர் ஆரியதாஸ, மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் மற்றும் விவசாயத் திணைக்களம்,கமநல சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.









 


            (அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை- இலுப்பைகுளம் பகுதியில் இருந்து யுத்தம் காரணமாக 33 வருடங்கள் பிரிந்து சென்ற கணவன் மனைவி மீண்டும் சந்தித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டு திருகோணமலை ஏழாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது  கணவன் மனைவி என திசை மாறிச் சென்ற செல்வரட்டினம் யோகேஸ்வரி (70வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.

 இந்நிவையில் இந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர்.

1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பிறந்த செல்வரத்தினம் யோகேஸ்வரி (70 வயது) என்பவர் 1990 ஆம் ஆண்டு 06 மாதம் ஏழாம் கட்டை பகுதியில் காணாமல் போனதாக கோபால் செல்வரத்தினம் (74வயது) தெரிவித்தார்.

அன்று தொடக்கம் குறித்த மனைவியை தேடி வந்ததாகவும் மனைவி உயிரிழந்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 26 ஆம் தேதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாரின் உதவியுடன் மனைவி உயிரோடு இருப்பதாக தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கு சென்றபோது மனைவியின் தோற்றம் மாறி இருந்த போதிலும் நாடியில் மச்சம் இருந்ததும் தலையில் காயம் இருப்பதையும் கண்டேன்.

அப்போது இவர் தான் என்னுடைய மனைவி எனவும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த நேரம் என்னுடைய மனதில் ஆழ்ந்த சந்தோசம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தனது பிள்ளைகளுக்கு இவர்தானா தனது தாய் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணினுடைய உறவினர்கள் நான்கு பேரின் பெயர்களை 33 வருடங்கள் காணாமல் போயிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட செல்வரட்ணம் யோகேஸ்வரி என்ற பெண் தனது பிள்ளைகள் மத்தியில் கூறியதை அடுத்து தனது தாய்தான் என உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அத்துடன் ஏழு வயதில் காணாமல் போன தனது தாய் 41 வயதான நிலையில் நோயுற்ற நிலையில் தம்மிடம் வந்து சேர்ந்தது தமக்கு கடவுள் கொடுத்த வரம் எனவும் அவரது மகன் எமக்கு தெரிவித்தார்.

அதே நேரம் தனது தாயின் முகத்தை காணாத நிலையில் தாயின் உறவினர்களின் உதவியுடன் தன்னை பெற்றெடுத்த தாய் இவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மற்றுமொரு மகள் சந்தோசமாக தெரிவித்தார்.


தாங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் தாய் இல்லாத கவலை இருந்த போதிலும் 33 வருடங்களுக்கு பின்னர் தனது தாயை கண்டது தனக்கு ஆழ்ந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தான் தொடர்ச்சியாக தனது தாயை ஆதரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டம் இலுப்பை குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு தனியாக சீவிப்பதற்கு எவ்வித வீடு மற்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

குறித்த தாய் தற்போது வசித்து வரும் தனது மூத்த மகளின் நிலைமை பொருளாதார கஷ்ட நிலை மட்டுமல்லாது உளநலம் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் அங்கு வசித்து வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.

கிரவல் மழைக்கு கீழே வீடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட தனது தாயை பார்த்துக் கொள்வதற்கு பொருளாதார சிக்கல் மாத்திரமில்லாமல் நோயுற்ற தாயைப் பார்ப்பதற்கு கூட வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

ஆகவே யுத்தம் காரணமாக 33 வருடங்கள் திசை மாறி வாழ்ந்து வந்த இந்த பெண்ணுக்கு யாராவது உதவி செய்ய முன்வருவார்களா?





(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்)
Show quoted text
Show quoted text

நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனடியாக வீடியோ வடிவில்  தெரிந்து கொள்ள Trincolive யூடியுப் பக்கத்திற்கு செல்லவும். பெல் பட்டனை அழுத்தவும்.மற்றவர்களுக்கும் செயார் செய்யவும்.



         


          (அப்துல்சலாம் யாசீம்)



திருகோணமலையில் வால்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உப்புவெளி பொலிஸ் பிரிவு உட்பட்ட சோலையடி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற  வாக்குவாதம் கைகலப்பாக மாறியதிலேயே இச்சம்பவம் இன்று (29)  இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்தில்  மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலொன்றின்  உரிமையாளரான திருகோணமலை -செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர். முரளிதரன் (46வயது)  ஆர்.விஜேந்திரன் (49வயது) மற்றும் உப்புவெளி-சோலையடி பகுதியைச் சேர்ந்த பாக்கியராஷா செல்வா (51வயது) ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

காயமடைந்த மூவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட குறித்த மூவரையும் உப்புவெளி பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டதுடன் தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


              (அப்துல்சலாம் யாசீம்)


கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெண் உத்தியோகத் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் (28)  இடம்பெற்றுள்ளது.

இதன்போது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஊர்மிளா கிருபாகரன் (45வயது) என்பவரே தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிய வருகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-
 
திருகோணமலை- சமுத்ராகம பகுதியில் சட்ட விரோதமாக கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு சென்று அறிவுறுத்தல் வழங்கிய போது தன்னை
தாக்கியதுடன் தனது கடமைக்கு இடையூறு விளைவித்த தாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில
 முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த 
முறைப்பாட்டையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளரை தொலைபேசி மூலம் பல தடவைகள் தொடர்பு கொண்ட போதிலும் அவர் அவ்வழைப்பை ஏற்காமல்  துண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.



 


             ( அப்துல்சலாம் யாசீம்)


கிழக்கு மாகாண சபை வருமான சட்ட மூலம் இல்லாமல் சபைகளுக்கிடையே ஒருமைப்பாடு இல்லாமல் வருமான நிதி சேகரிக்கப்பட்டு வருவதாக சமூக அபிவிருத்தி கட்சி குற்றஞ்சாற்றியுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் குகதாஸ் பிரகாஷ் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகள் வருமானம் சேகரிக்கும் பொருட்டு பணத்தை பெறுகின்றார்களே தவிர உபசட்டமூலம் இல்லாமல் சேகரிக்கும் வருமானங்களுக்கு சேவை கிடைக்கப் பெறவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் நடைபாதை வியாபாரி, சுற்றுலா விடுதி, ஹோட்டல், உணவு விடுதி, கல்யாண மண்டபங்கள், பல்வேறுபட்ட வர்த்தக கடைகள், அறுவைச் சாலை கட்டணம், வீதி அலங்காரம் செய்தல், வெதுப்பக கட்டணம் போன்ற விடயங்களுக்காக நகர சபை, மாநகர சபைகள் வருமானம் சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

.ஆனாலும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை பணம் அறவிடுவதை தவிர சுகாதார ஏற்ற அமைவிடம் சுற்றாடல் பாதிப்பு ஆகியவற்றை கரைத்துக் கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாண சபை 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை 2007 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு இன்று வரை உள்ளூராட்சி சபைகளில் உப சட்டமூலம் வெளியிடப்படவில்லை எனவும் வடக்கு மாகாண சபை 2017 ஆம் ஆண்டு உப சட்டமூலம் வெளியிட்டுள்ளது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே கிழக்கு மாகாண சபை உப சட்டமூலத்தை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அவர் பிரதம செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





 

 


           (அப்துல்சலாம் யாசீம்)




கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவரிடமிருந்து சூட்சுமமான முறையில் இரண்டு பவுண் பெறுமதியான தங்க ஆபரணத்தை திருடிச்சென்றுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலைக்கு சமாதி வீதியில் வசிக்கும் பி. நிதர்ஷன் (20வயது) எனும் மாணவன் கண்டி பேராதெனியவில் இணையத்தள பாதுகாப்பு தொடர்பான பயிற்சி நெறியில் கல்வி கற்று வருகின்றார். 

https://youtu.be/gdvHDbs5wPE


இவர் விடுமுறைக்காக திருகோணமலையிலுள்ள தனது வீட்டுக்கு செல்லும்போது   பஸ்ஸில் தனது ஆசனத்துக்கு அருகில் 45வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்துள்ளார். இருவரும் நட்பு ரீதியாக பேசிக் கொண்டு வந்த போது தன்னை பிஸ்கட் சாப்பிடுமாறு கொடுத்துள்ளார். வேண்டாம் எனக் கூறியபோதிலும், இல்லை பரவாயில்லை சாப்பிடுங்கள் என   வற்புறுத்தியதையடுத்து பிஸ்கட்டை சாப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிஸ்கட் சாப்பிட்ட பின்னர் தண்ணீர் போத்தலையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து, மயக்கமுற்ற மாணவன் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். 

அதேவேளை அவருடைய கழுத்தில் இருந்த இரண்டு பவுண் பெறுமதியான தங்க ஆபரணத்தையும் திருடிச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget