திருமலை- மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா


திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா இன்று (18) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.


சிங்கள, தமிழ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ சமயங்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.



கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையணை அடி, கரண்டியில் தேசிக்காய் வைத்து நடத்தல், யானைக்கு கண் வைத்தல், தொப்பிகளை மாற்றுதல், பலூன் நடனம், பப்பாளி விதைகளை எண்ணுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget