திருமலை-மஹதிவுல்வெவ பகுதியில் இரண்டாவது கொரோனா தொற்றாளர்






(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கடற்படை சிப்பாயிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.

வெலிசற கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறைக்காக வருகைதந்த மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த இவர் தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

 குறித்த நபர் திருகோணமலை - மஹதிவுல்வெவ, புபுதுபுர பகுதியைச் சேர்ந்த  (26வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த கடற்படை வீரருடன் தொடர்பு வைத்திருந்த 60 குடும்பங்களை  தனிமைப்படுத்தி உள்ளதாகவும், இந்நிலையில் கடற்படை வீரரின் தந்தை சிவில் பாதுகாப்பு படை வீரர் எனவும் அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களை விசாரணை செய்து வருவதாகவும்  மொரவெவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget