திருகோணமலை-புத்தளம் பிரதான வீதி ஹொரவ்பொத்தானவிபத்தில் பொலிஸ் சார்ஜன் மரணம்


திருகோணமலை-புத்தளம் பிரதான வீதி ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் இன்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (40வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கடமையை முடித்துக் கொண்டு வீடு சென்ற போது லொறியொன்று மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவ்பத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




ABDULSALAM YASEEM TRINCO
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget