டெங்கு பரவும் அபாயம் -திருகோணமலை மக்களுக்கு அறிவுறுத்தல்

திருகோணமலை மாவட்டத்தில் 17 இடங்களை ஆய்வு செய்த போது டெங்கு குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் தெரிவித்தார்.

 கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (28) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் எதனை தெரிவித்தார் . 

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்டத்தில் 17 இடங்களில் டெங்கு தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் 17 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஓரளவு கட்டுப்பாட்டிட்குள் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

 இருந்தபோதிலும் டெங்கு பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. டெங்கு தொடர்பில் ஆய்வு செய்த போது அதிகளவிலான இடங்களில் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஆய்வு செய்த 17 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் இதனால் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

 மிக விரைவில் டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறு இருக்கின்றது.அதிஷ்ட வசமாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக டெங்கு நோயின் தாக்கமோ மரணங்களோ கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவில்லை. ஆகவே மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் சுற்று புரச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget