கிழக்கு மாகாண ஆளுநர் சேவையை நீடிக்கவும்-மதத்தலைவர்கள் கோரிக்கை!


கிழக்கு மாகாண  ஆளுநராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் அனுராதா யாஹம்பத்தின்   குறித்த  பதவியை நீடிக்குமாறு கோரி மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருகோணமலை-உப்புவெளி பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


இதுகுறித்து ஊடகங்களுக்கு  சர்வ மத தலைவர்கள் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தனர்.


கடந்த மூன்று வருட காலமாக கிழக்கு மாகாணத்தினுடைய  ஆளுநராக செயல்பட்டு வருகின்ற அனுராதாத யகம்பத்  அவர்கள் இன மத குல பேதம் இன்றி மாகாணத்தினுடைய அபிவிருத்தி கருதி செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை சிரமமான முறையிலே முன்னெடுத்து வந்த சந்தர்ப்பத்தில் இவரை இடமாற்றுவதன் மூலம் அந்த வேலைகள்  இடை நடுவே நிறுத்தப்படும் என்றும் மாகாணத்தினுடைய அபிவிருத்திக்கு அது தடையாக அமையப் பெறுவதாகவும்  தெரிவித்தனர்.


கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கக்கூடியவரை  ஒன்றரை வருடங்களுக்காவது  சேவையாற்ற அனுமதித்து மக்களுடைய  பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு  இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தினுடைய கல்வி விவசாயம் மற்றும் மத நல்லிணக்கத்தை எழுப்பியவர் எனவும் கடந்த காலங்களில் சேவையாற்றிய ஆளுநர்களை விட தற்போது ஆளுநர் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகின்றார் எனவும் இவரை தொடர்ச்சியாக கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றுவதற்கு  ஜனாதிபதி நியமனம் வழங்க வேண்டும் எனவும் சர்வ மத தலைவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.




 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget