புனித நோன்பை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

 


          (அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-ரொட்டவெவ கிராமத்தில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவையின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வரும் YMMA கிளையினால் புனித நோன்பை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் இன்று (02)  வழங்கி வைக்கப்பட்டது.

சமூக வலைத்தளம் ஊடாக மொரவெவ சிவில் சமூக அமைப்பினால்  நோன்பு காலத்தில் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு திருகோணமலை YMMA மாவட்ட கிளையின் மாவட்ட பணிப்பாளர் எம்.எம்.முக்தார் , கிளைத் தலைவர் ஏ.எம்.எம்.பரீட்  சக  திருகோணமலை ஜமாலியா YMMA உறுப்பினர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட  70 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இதன்போது சிவில் சமூக அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பைசர், மௌலவி ஐனுதீன், மற்றும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அப்துல்சலாம் யாசீம் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைத்தனர்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget