சிவில் சமூக அமைப்பின் பொறுப்புகளும் கடமைகளும் பற்றிய செயலமர்வு

 (பதுர்தீன் சியானா )



மொரவெவ சிவில் சமூக அமைப்பினால் இன்று (13) சிவில் சமூக அமைப்பின் பொறுப்புகளும் கடமைகளும் பற்றிய செயலமர்வு அமைப்பின் தலைவர் 
அப்துல்சலாம் யாசீம் தலைமையில் நடைபெற்றது.

மஹதிவுல்வெவ விஜயராஜ விகாரையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கிராம மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அறுபதுக்கு மேற்பட்ட  சமூக சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவன இணையத்தின் தலைவர் டொக்டர் ரவிச்சந்திரன் வளவாளராக  கலந்து கொண்டதுடன் AHRC அமைப்பின் பிரதிநிதிகளும் இச்செயலமர்வில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


இந்த அமைப்பின் ஊடாக இனங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதுடன், இளைஞர் யுவதிகள் மத்தியில் சர்வ மத போதனைகள் தொடர்பாக அறிவூட்டல்களை வழங்குவதேயாகும்.

மேலும் போதை பொருள் தடுப்பு செயற்பாடுகளுக்க முன்னுரிமை வழங்கி இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லுறவை பேனும் நோக்கில் பிரதேச மட்டத்தில் செயல்படுவதாகும் இதன் நோக்கம் எனவும் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget