நஞ்சருந்தி மூன்று பிள்ளைகளின் தந்தை மரணம்


திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நஞ்சருந்தி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குடும்பத்தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை மஹதிவுல்வெவ வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று (03)  அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் மஹதிவுல்வெவ-01ம் கண்டத்தில் வசித்து வரும் டபிள்யூ.எம்.வசந்த திசாநாயக்க (35வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget