கடல் அலையில் சிக்குண்டு வயோதிபர் மரணம்-வெறுகல் முகத்துவாரத்தில் சம்பவம்


திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் பகுதியில் மீனவரொருவர் கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர், கட்டைபறிச்சான்-சாலையூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குழந்தை வடிவேல் ரவீந்திரன் (53 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கரவலை இழுத்துக் கொண்டிருந்தபோது அவர் சற்று கடலுக்குள் இறங்கி வலையை  இழுத்துக் கொண்டிருந்த போது அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலத்தை சம்பவ இடத்திற்கு பார்வையிட சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன  சென்று பார்வையிட்ட நிலையில் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என உறவினர்களினால் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியதையடுத்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget