திருமலை விபத்தில் வைத்தியரின் மகள் படுகாயம்

 


திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியரின் மகள்  படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்



இவ்விபத்து இன்று (21) காலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வைத்தியரின் மகள்  படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை- பாலையூற்று பகுதியைச் சேர்ந்த பீ.நிலாசினி (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget