திருமலை விபத்தில் வைத்தியரின் மகள் படுகாயம்

 


திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியரின் மகள்  படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்



இவ்விபத்து இன்று (21) காலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வைத்தியரின் மகள்  படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை- பாலையூற்று பகுதியைச் சேர்ந்த பீ.நிலாசினி (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.