திருமலையில் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-கோட்ட பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை நகர்ப்பகுதியில்  கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மறு அறிவித்தல் வரை பாடசாலைகளை மூடுமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களின் ஊடக செயலாளர் றுச்சிற டிலான் மதுசங்க
அனைத்து ஊடகங்களுக்கும்  ஊடக அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.