கிணற்றிலிருந்து விழுந்து சிறுவன் மரணம் - கிண்ணியாவில் சம்பவம்

 

(அப்துல்சலாம் யாசீம்) 


திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பூவரசன்தீவு பகுதியில்  07 வயது சிறுவன்  கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா - பூவரசன்தீவு பகுதியைச் சேர்ந்த முஹம்மது நிஜாம் முஹம்மது அஸ்மி  (07வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- 11 வயது சிறுவனும் சக ஏழு வயது சிறுவனும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது 11 வயது சிறுவன் மணல் குவியலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். 

இந்நிலையில் சக 07 வயது சிறுவன் பாழடைந்த கிணற்றுப் பக்கம் சென்று தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளதாகவும் இதனையடுத்து 11 வயது சிறுவன் உறவினர்களிடம் தெரியப்படுத்தியதையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும்  பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

 இதனையடுத்து  கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே.நெஹ்மத்துல்லாஹ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார். 

 உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது  திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெற உள்ளதாகவும் இதனை அடுத்து சிறுவனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget