உள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் உள்ளூர் துப்பாக்கியை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரொட்டவெவ இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து இன்று (23) மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை சோதனையிட்ட போதே அவரிடமிருந்து உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, எத்தாபெந்திவெவ, கடவத்த குபுறுயாய வீதியைச் சேர்ந்த சுனில் சாந்தகே ஹசேல பிரியசாந்த (25வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தான-றத்மலை பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்தபோது அதனை சோதனை இடுவதற்காக நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் நிறுத்தாமல் செல்வதற்கு முற்பட்டதாகவும் இதேவேளை அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து உள்ளூர் உற்பத்தி துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் இதனையடுத்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை நாளைய தினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சந்தேக நபர் தொடர்பில்  முன் குற்றங்கள் பற்றிய விபரங்களை திரட்டி வருவதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget