யானையின் தாக்குதலினால் பெண்ணொருவர் மரணம்


திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பகுதியில் யானையின் தாக்குதலினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று  (11)  மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயாரான தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் அமராவதி 
 (49 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த பெண் ஆடு மேய்ப்பதற்காக தங்கபுரம் பகுதிக்கு சென்ற போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதாகவும் தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே. எம். நூறுல்லாஹ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது. 

மரணம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget