பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு!



           (அபு அலா)

கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய வைத்தியர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு இன்று தம்பலகாமம் – முள்ளிப்பொத்தானை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. 


கொழும்பு சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன் தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் வைத்தியர் சி.சிவகுமார் உள்ளிட்ட வைத்தியர்களும், திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



இதன்போது, சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன்,  கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் வைத்தியர் சி.சிவகுமார் ஆகியோரினால் பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றி எடுத்துரைத்தனர்.


இதில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களின் வைத்திய முறைகளை எவ்வாறு கடைப்பிடித்துச் செல்லல்வேண்டும் என்ற விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாரிவு செய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்லக்கூடிய பைகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget