AHRC நிறுவனத்தினால் 26 விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள்!

 


          (அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிண்ணியா வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 26 விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் (AHRC) அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.


தற்கால பொருளாதார பின்னடைவு நிமித்தம் நாளாந்த வருமானத்தை இழந்து நிற்கும் விவசாய குடும்பங்களின் நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் AHRC நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலைபேறான உணவு தேவையை பூர்த்தி செய்யும் செயற்திட்டத்தின் கீழ் இப்பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில்  கிண்ணியா பிரதேச செயலாளர் மூதூர் பிரதேச செயலாளர் வெருகல் பிரதேச செயலாளர் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் பிரதி இணைப்பாளர் உதவி கணக்காளர் திட்ட இணைப்பாளர்கள் மற்றும் வெருகல் பிரதேச சிவில் செயற்பாட்டு வலையமைப்பின் செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.


இதன் தொடர் செயற்பாடாக கந்தளாய் மொரவெவ குச்சவெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கும் விவசாய உபகரணங்கள் மற்றும் விதை தானியங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது








.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget