கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெண் உத்தியோகத்தருக்கு தாக்குதல்

 


              (அப்துல்சலாம் யாசீம்)


கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெண் உத்தியோகத் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் (28)  இடம்பெற்றுள்ளது.

இதன்போது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஊர்மிளா கிருபாகரன் (45வயது) என்பவரே தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிய வருகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-
 
திருகோணமலை- சமுத்ராகம பகுதியில் சட்ட விரோதமாக கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு சென்று அறிவுறுத்தல் வழங்கிய போது தன்னை
தாக்கியதுடன் தனது கடமைக்கு இடையூறு விளைவித்த தாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில
 முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த 
முறைப்பாட்டையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளரை தொலைபேசி மூலம் பல தடவைகள் தொடர்பு கொண்ட போதிலும் அவர் அவ்வழைப்பை ஏற்காமல்  துண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget