புல்மோட்டையில் 20 மீனவர்களுக்கு வல்லங்களும்- உபகரணங்களும் வழங்கி வைப்பு


.     (அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 20 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி வள்ளங்களும், உபகரணங்களும் இன்று (23) வழங்கி வைக்கப்பட்டது. 
 பிலால்நகர், சதாம்நகர், பட்டிகுடா ஆகிய கிராமங்களுக்கான முன்மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்கா நிறுவனம் 20 மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் மற்றும் உபகரணங்களை கையளித்தனர்.


 பட்டிகுடா, களப்பு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் புல்மோட்டை 4 ஆம் வட்டார கிராம, பொருளாதார,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் M.A.M. அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவி பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் உரையாற்றுகையில், இத்திட்டத்தை நீங்கள் வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, முஸ்லிம் எயிட் நிறுவனமும் பிரதேச செயலகமும் இத்திட்டத்தினை தொடர்ச்சியாக கண்காணிக்கும் எனவே வழங்கப்பட்ட உபகரணங்களை முறையாக பயன்படுத்தி உச்சபயனை அடையுமாறும் கூறினார்.

 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்ட நிலைமைக்கு மத்தியில் நாட்டில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முஸ்லிம் எய்ட் நிறுவனம் வரிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget