Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலையில் சிவில் பாதுகாப்பு படை வீரர் கஞ்சாவுடன் கைது- சந்தேக நபருக்கு விளக்கமறியல்

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிவில் பாதுகாப்பு படை வீரரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை நேற்று (23) ஆஜர்படுத்தியபோது கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- மிகிந்தபுர பகுதியைச் சேர்ந்த ஏட்டிரியல் ரொஷான் சுமதிபால (38வயது) எனவும் போலீசார் தெரிவித்தனர்.

திருகோணமலையை கடற்கரை பகுதியில் இரகசியமான முறையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக துறைமுக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடத்து  குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபது
 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments