திருகோணமலை சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண் வீழ்ந்து மரணம்

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை- சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் விழுந்து மரணம் அடைந்த சம்பவமொன்று  பதிவாகியுள்ளது.

இன்று (24)  பிற்பகல் இவருடைய சடலம் வாய்க்காலில் மிதந்து கொண்டிருக்கும்போது பிரதேச இளைஞர்களால் மீற்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண் திருகோணமலை -சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அயிலந்தன் பெருமாள் (78வயது) எனவும் தெரியவருகின்றது.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது தனது மகனின் வீட்டுக்கு சென்று இன்று காலை 11 30 மணியளவில் வீட்டிற்கு முன்னால் உள்ள வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற போது தவறுதலாக விழுந்து வாய்க்கால் ஊடாக மிதந்து வந்ததாகவும், இதனையடுத்து அவரது சடலத்தை மீட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையன் மூலம் தெரியவந்துள்ளது.


.

உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget