திருகோணமலையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் 4 பேர் படுகாயம்- ஒருவர் மரணம்


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07)  அதிகாலை  1.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா-காக்காமுனை பகுதியைச் சேர்ந்த எம்.முஜாஹித் (20வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை  நான்கு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  கிண்ணியா ரஹ்மானியா வீதியைச் சேர்ந்த 18 வயது 20 வயது 29 வயது மற்றும் 60 வயது உடையவர்கள் காயமடைந்துள்ளதாகவும், இதில் இராணுவ சிப்பாய் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை  அனுமதிக்கப்பட்ட நான்கு பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் கிண்ணியா-நடுவூற்று   பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget