கஞ்சா மட்டும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

 


(அப்துல்சலாம் யாசீம்)


கஞ்சா போதைப்பொருள்  மற்றும் ஹெரோயினுடன்  கைது செய்யப்பட்ட பெண்ணை  எதிர் வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக்க லக்மால் ஜெயலத் முன்னிலையில் குறித்த பெண்ணை நேற்று (02) ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை-ரொட்டவெவ  பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஜமால்தீன் சுமைரா (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

1997 எனும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 23 கஞ்சா பக்கெட் கைப்பற்றப்பட்டதாகவும் இரண்டு கிரேம் 98 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget