கிழக்கில் புதிதாக 34 தாதிய உத்தியோகத்தர்கள்!

 


கிழக்கு மாகாணத்தில் புதிதாக 34 தாதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.





கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் வெற்றிடமாக காணப்பட்ட இடங்களுக்கு தேவைக்கேற்ற விதத்தில் தாதியர்களை  அனுப்பி வைத்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.


இதேவேளை கிராமப்புற வைத்தியசாலைகளுக்கு தாதியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் குறிப்பாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இரண்டு தாதியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் இதனால் நோயாளர்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள செல்கின்றபோது தாமதம் ஏற்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன் கிண்ணியா- மூதூர் வைத்தியசாலைகளுக்கு தாதியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

ஆனாலும் அதி கஷ்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கு தாதியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget