கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(13) சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார டேப் தலைமையில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வினை திருகோணமலை சிறைச்சாலையும்,சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கமும் இணைந்து மேற்கொண்டதோடு கற்றல் உபகரணங்களை சிறைச்சாலை ஐக்கிய ஒன்றியம் வழங்கியிருந்தது.


இதன் போது கைதிகளின் 75 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் இணைத் தலைவர்களான தயானந்த ஜெயவீர,சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர்,சிறைச்சாலை ஐக்கிய ஒன்றியத்தின் சார்பாக எஸ்.சுகன்,எஸ்.ரவிந்திரன்,பிரதான ஜெயிலர் எல்.எஸ்.பி.லியனகே, திருகோணமலை நவாமிலாஸ் உரிமையாளரும், சமூக சேவையாளருமான எஸ்.எச்.எம். நியாஸ் ஹாஜியார், புனர்வாழ்வு அதிகாரிகள்,பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget