திருமலையில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மரணம்!

 


திருகோணமலை-செல்வநாயகபுரம் பகுதியில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில்  ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இச்சம்பவம் நேற்று (06) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவளிபுரம்-சஹாயமாதா வீதியில் வசித்துவரும் ரவீந்திர குமார் ஜேனுஷன் (16வயது) எனவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவளிபுரம் பிரதேசத்திலுள்ள  (பாம்குளம்) என்று அழைக்கப்படும் குளத்துக்கு  வழமைபோன்று நண்பர்களுடன் பொழுதுபோக்கை கழிக்கச் சென்றவர்களை நேற்று நண்பர்கள் மூன்று பேரும் குளித்ததாகவும் இதேவேளை சக நண்பர் ஒருவருடைய செருப்பை குளத்துக்குள் விளையாட்டுக்காக வீசியபோது அதனை எடுத்துச் சென்றவர் நீரில் மூழ்கி தாகவும் இதனை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget