திருமலையில் பொலிஸ் பரிசோதகர் மரணம்

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இன்று அதிகாலை (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த  பீ.எச்.சுமண பண்டார (54 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த பொலிஸ் பரிசோதகர் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்து பொலிஸ் பரிசோதகர் துணை தொடர்பில் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget