மொரவெவ-யானைக்கு வைத்த மின்கம்பியில் சிக்கி இளைஞன் மரணம்! (வீடியோ இணைப்பு)

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை- பன்குளம் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (15)
11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு-காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் கிருஷாந்தன் (22வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பன்குளம்-ஆறாம் வாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவரின் தாயின் தங்கையின் (சித்தி வீட்டில்) வேலைக்காக சென்றிருந்ததாகவும் இதேவேளை இவ்வனர்த்தம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், திருட்டுத்தனமாக மின்சாரத்தை பொருத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget