திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் 67 கொரோனா நோயாளர்கள்!


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களுக்குள் 67 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 06 நாட்களுக்குள் திருகோணமலை நகர் பகுதியில் 43 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏழு பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும்  மூதூர் பகுதியைச் சேர்ந்த  இருவருக்கும் தம்பலகாமத்தில் ஒருவருக்கும் சேருவில பிரதேசத்தில் ஒருவருக்கும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் மொத்தமாக 67 பேர் இனங்கானபட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட முருகாபுரி, அபயபுர , துளசி புரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இன்று வரைக்கும் 846 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget