திருமலையில் விமானப்படை சிப்பாய் மாடியிலிருந்து விழுந்து மரணம்!

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (03) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குருநாகல்- கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பிரியதர்ஷன எனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 இது தொடர்பில் சீனக்குடாபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.