கிண்ணியாவில் 13 வயது சிறுவன் மரணம் விசாரணைகள் ஆரம்பம்


(பதுர்தீன் சியானா)

 திருகோணமலை கிண்ணியா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா- நடுவூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு குட்டியாகுளம் பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அஜ்மி (13வயது) எனவும் தெரியவருகின்றது.

 குறித்த சிறுவனுக்கு உடம்பில் வலி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு சென்றதாகவும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.


இருந்தபோதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும்  மரணத்திற்கான காரணம் எதுவும் தெரியாதமையினால் குறித்த சிறுவனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் மரணித்தமை  தொடர்பில் வைத்தியசாலையில் பதட்ட நிலை ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget