திருகோணமலை-குச்சவெளியில் இளைஞர் யுவதிகளுக்கு 35 ஏக்கர் காணிகள் கையளிப்பு


(அப்துல்சலாம் யாசீம்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு  எதிர் கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 35 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமும், தலைவருமான திஸார ஜெயசிங்கவினால் இன்று (03) உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியில் 1984 ஆம் ஆண்டு இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சொந்தமான காணிகள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தனியார் சொந்தமாக்கப்பட்டு  ஆதரவற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அதனை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் எதிர் கால நடவடிக்கைகளுக்காக இளைஞர் விவசாயம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்காக 35 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 


இக்காணியினூடாக  சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்துவதுடன் சர்வதேச சர்வதேச இளைஞர் அபிவிருத்தி வலையம் ஒன்றினை உருவாக்க உள்ளதாகவும் இதனூடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களை தூர நோக்காகக் கொண்டு ஏற்படுத்த உள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தலைவருமான திஸ்ர ஏக இதன்போது தெரிவித்தார். 


இந்நிகழ்வில் தேசிய மாற்றத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திஸார ஜெயசிங்க மற்றும் அவரின் பிரத்தியேக செயலாளர் பசிது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிசிர குமார மற்றும் வடக்கு மாகாணம் பணிப்பாளர் சந்திரபால, நிர்வாகத்துறை பணிப்பாளர் சமல் மனுல, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget