திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்

திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதி ஆறாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (13)  மாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து நிலாவெளி பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறி முற்சக்கரவண்டியுடன் மோதுன்டதுடன், முற்சக்கர வண்டி  மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவெளி, 07ம் கட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ரவூப் என்றழைக்கப்படும் மொஹிதீன்தீன் தௌபீக் (48வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget