தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் ஆலய உற்சவம் இடம் பெறாது

திருகோணமலை - தம்பலகாமம் ஆதிகோணஸ்வரர்ஆலய வருடாந்த உற்சப திருவிழா இம்முறை இடம் பெறாது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இம்மாதம் 28ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் ஆலய கங்காணம், நிர்வாக சபையயும் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நாட்டில் ஏற்பட்டுள்ள கெரோனா வைரஸ் காரணமாக திருவிழா இவ்வருடம் செய்வதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சிறப்பு அபிஷேக பூசை மட்டுமே நடைபெறும் எனவும் அடுத்த வருடம் ஆலயத்தின் திருவிழாவானது மிகச் சிறப்பாக இடம்பெறும் எனவும் ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.