திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் ஒன்று கூடிய 13 பேரை கைது


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் ஒன்று கூடிய 13 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (13) இடம்பெற்றுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு சட்டத்தின் போது கோயில் ஒன்றில் ஒன்றுகூடிய 13 பேரையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் அவர்களை பிணையில் விடுவித்ததுடன், பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளுடன் கைது செய்யப்பட்ட 13 பேரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 16 தொடக்கம் 80 வயதுடையவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget