இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மக்கள் பாவனைக்கு

கொழும்பு டவுன் ஹால் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மொபிடல் நிறுவனத்தின் பூர்ண அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரமும், எந்தவிதமான உபகரணங்களையும் பாவித்து இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய Internet of Things எனும் எண்ணக்கருவுக்கு அமைய இது அமைக்கப்பெற்றுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதி, ATM வசதி, குடிநீர் போத்தல்கள் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளிட்ட மேலும் பல வசதிகளுடன் இந்த நவீன பேரூந்து நிலையம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.