உப்பாறு வைஷ்ணவி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

 


கிண்ணியா-உப்பாறு வைஷ்ணவி வித்தியாலய மாணவர்களுக்கு திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் (10) வழங்கி வைக்கப்பட்டது.

கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட பின் தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களின் நலன் கருதி அவுஸ்திரேலியாவை சேர்ந்த விக் மற்றும் கரேன் ஆகியோரின் நிதி அனுசரணையில் குறித்த பாடசாலை கல்வி பயிலும் 69 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்நிகழ்வில் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் எஸ் சௌந்தரராஜன் மற்றும் கழக அங்கத்தவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


முதலாம் தரம் முதல் ஒன்பதாம் ஆண்டு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கே கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget