யானை-மனிதன் மோதலை நிறுத்துக- சவப்பெட்டியை வீதியில் வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

 


திருகோணமலை கோமரங்கடவல பிரதான வீதியை மறைத்து சவப்பெட்டியை வீதியில் வைத்து வீதியை மறைத்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த ஒரு மாத காலத்திற்குள்  கோமரங்கடவல பிரதேசத்தில் மாத்திரம் ஐந்து பேர் இதுவரை யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாகவும், இதேவேளை (29) கோமரங்கடவல- அடம்பன பகுதியைச் சேர்ந்த உக்குராலகே ஜயரத்ன (64வயது) யானையின் தாக்குதலினால் உயிரிழந்ததாகவும் அவருடைய சடலத்தை வீதியில் வைத்தே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யானை தாக்குதலை கட்டுப்படுத்துமாறு பல கோரிக்கைகள் முன்னெடுத்து இருந்த போதிலும் அரசாங்கத்தினால் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பௌத்தப்பிக்குகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget