சேனை காட்டில் காணாமல் போன சிறுவன் நான்கு மணித்தியாலங்களுக்கு பின்னர் மீட்பு


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-அத்தாபெந்திவெவ பகுதியில் சேனை காட்டில் காணாமல் போன  சிறுவன் நான்கு மணித்தியாலத்திற்கு பின்னர் காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.

அத்தாபெந்திவெவ பகுதியில் உள்ள பழைய சேனை காட்டிற்குள் வட்டுக்காய் ஆய்வதற்காக சிறுவனின் தாய் மற்றும் அம்மம்மாவுடன் சென்றபோது சிறுவனை சைக்கிள் அருகில் நிறுத்திவிட்டு தாயும் அவரது அம்மம்மாவும் வட்டுக்காய் பறித்துள்ளனர்.


இதேவேளை 3 வயது சிறுவன் பாழடைந்த வழியூடாக தாயாருக்கும் அம்மாவுக்கு தெரியாமல் இவர்களை தேடி சென்றுள்ளார்.

தாயும், அம்மம்மாவும் சிறுவனை நிறுத்திய இடத்தில் வந்து பார்த்தபோது சிறுவன் அவ்விடத்தில் இருக்கவில்லை எனவும் சிறுவனை குறித்த இடத்தை சுற்றிப் பார்த்த போது சிறுவன் இருக்கவில்லை எனவும் அதனை அடுத்து கிராம மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் இணைந்து காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர்.

 இந்நிலையில் சிறுவனை நிறுத்திய இடத்திலிருந்து 3 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள காட்டுப்பகுதியில்  நான்கு மணித்தியாலத்திற்கு பின்னர் சிறுவன் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன சிறுவன் செனவிரத்னகே சாஜித் சுரங்க செனவிரத்ன மற்றும் ஹன்சிகா மதுவந்தி ஆகியோரின்  தினூஜ பெஹசர (03வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தனது சிறுவனை மீட்டு தந்த பொலிஸார், சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளையும் சக உறவினர்கள் தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget