திருகோணமலை மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம் கோமரங்கடவலயில் திறந்து வைப்பு

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. ஆர். எம்.தௌபீக் இன்று (08) திறந்து வைத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில்  ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை, குச்சவெளி பிரதேச வைத்தியசாலை, கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை ஆகிய மூன்று வைத்தியசாலைகளும் கொரோனா இடைநிலை சிகிச்சை  நிலையமாக மாற்றப்பட்ட நிலையில் குச்சவெளி கொரோனா இடைநிலை  சிகிச்சை நிலையத்தில் பெண்கள் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் திருகோணமலை மாவட்டத்துக்குள் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கிழக்கு மாகாணத்தில் ஒரு மாத காலப்பகுதியில் 1768 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 5467 தொற்றாளர்கள் கிழக்கு மாகாணத்தில் இன்னும் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் 936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மத்திய சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக நோயாளர்களின்  கட்டில்களை அதிகரித்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வின் போது மத்திய சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
 டி.ஜீ.எம்.கொஸ்தா, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந், கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி சோபா சுரேனி கும்புரேகம, மற்றும் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget