திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரை 42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா!


 (அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தில் 42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று  இன்று வரை இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (31) காலை 10.00வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 3363 பேர் இதுவரை கோவிட்-19 தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை  1922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மே மாதம் மாத்திரம் 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரை 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையில் 69 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா  தெரிவித்தார்.

இதேவேளை மாவட்டத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் படுக்கை அறைகளை (கட்டில்கள்) அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget