கிண்ணியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் மகமார் கிரமத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-கிண்ணியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் மகமார் கிரமத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுடன் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதனை அடுத்து இவ்வாறு அடக்கம் செய்வதற்கான இடங்கள் நாடளாவிய ரீதியில் முன்மொழியப்பட்டு வரும் நிலையில் கிண்ணியாவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மகமார் கிராம சேவகர் பிரிவின் மையவாடி ஒன்று அடக்கம் செய்வதற்கான இடமாக முன்மொழியப்பட்டுள்ளது.



குறித்த இடத்தினை இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அது தொடர்பிலான அறிக்கையினை வழங்கவுள்ளதாகவும் சுற்றறிக்கைக்கு அமைவாக குறித்த இடம் அமையும் போது அடக்கம் செய்வதற்கான இடமாக இது அடையாளப்படுத்தப்படவுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கணி குறிப்பிட்டார்.



குறித்த விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர், பிராந்திய சுற்றுச் சூழல் அதிகாரிகளும் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget