வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் கோரிக்கைகளை முன்வைத்து இன்றோடு ஒன்பதாவது நாள் உண்ணாவிரதம் நிறைவு


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் கோரிக்கைகளையும்  அரசியல் கைதிகளின் விடுதலையும்,  தமிழ் மக்களின் சம உரிமைகளையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி நா. ஆஷா மற்றும் திருமதி இரா. கோசலாதேவி ஆகியோர் திருகோணமலை சிவன் கோயிலின் முன்றலில் முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்  செவ்வாய்கிழமை  (23) 09 ஆவது நாளாகவும் தொடர்ந்து வந்த நிலையில் இலங்கைக்கு எதிரான  பிரேரனை நிறைவேற்றப்பட்டதால் உண்ணா விரதம் இருந்தோர் இளநீர் பருகி முடித்துக்கொண்டனர்.


இவை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கருத்து தெரிவிக்கையில்:


இன்று வரை நாங்கள் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என அவர்களுக்கான நீதி கோரிகையில் புகைப்படங்களுடனும்,  கண்ணீருடனும் வீதிகளில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கின்றோம்.


இலங்கை அரசாங்கத்தினுடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருந்தோம்.

தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படவேண்டும்,  எமது உரிமைகள் மறுக்கப்படுகின்றன, இங்கு நீதி கிடைக்காமையினாலேயே நாங்கள் சர்வதேசத்தை நாடியிருந்தோம்  எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றிருந்த நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது.நாம் அதனை வரவேற்கின்றோம் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget