ஹொரவ்பொத்தானை- கூரையில் ஏறியவர் தவறி விழுந்து மரணம்!

 


(அப்துல்சலாம் யாசீம்)


ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரிசி ஆலை ஒன்றின் கூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (19)  காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அக்குறனை -07ம் கட்டை பகுதியைச் சேர்ந்த முஹம்மத் யூசுப் முஹம்மத் புஹாரீ (60 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலுள்ள பொப் மில் என்றழைக்கப்படும் அரிசி ஆலையில் போடப்பட்டிருந்த சீட் உடைந்த நிலையில் கிடந்ததாகவும் அதனை மாற்றுவதற்காக கூரை மேல் ஏறிய நிலையில் தவறுதலாக விழுந்து கழுத்து உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம்  தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget