படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்- திருமலையில் சம்பவம்!

 


(பதுர்தீன் சியானா)

திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று (25) காலை 5.45; மணியளவில் சிறிய படகில் 4 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- திருக்கடலூர் ஹர்தாஸ் வத்த பகுதியைச் சேர்ந்த ஈ.ஜே.ஏ.ஜான (45 வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

படகு கவிழ்ந்ததில் மூவர் நீந்திய நிலையில் மற்றவர் நீரில் மூழ்கியதாகவும் அதனை அடுத்து அவரை மீட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.