தம்பலகாமம் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றிய யுவதி திடீர் மரணம்!


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த யுவதி மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (16)  மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த யுவதி  தம்பலகாமம்-கல்மெடியாவ , இலக்கம் 147 எக்ஸத் மாவத்த பகுதியைச் சேர்ந்த ஹேவாநம்பிகே சுபோதா பியங்கனி (31வயது) எனவும் தெரியவருகின்றது.

தம்பலகாமம் நோர் லங்கா ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதியின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை உயிரிழந்த யுவதிக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதற்காக மாதிரிகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget