தமிழ் மக்களின் வாக்குகள் வீணாகி விடக்கூடாது- வெள்ளத்தம்பி சுரேஷ்

(அப்துல்சலாம் யாசீம்) 

 தமிழ் மக்களின் வாக்குகள் வீணாகி விடக்கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை பட்டணமும் சூழலும்  பிரதேச சபையின் கிளைத் தலைவர் வெள்ளத்தம்பி சுரேஷ் தெரிவித்தார்.

திருகோணமலையில்  இன்று (14) இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுடனான கூட்டம் இடம்பெற்ற நிலையில் இம்முறை தமிழரசுக்கட்சி வாக்குகளை அதிகரிப்பதற்கான உத்திகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

திருகோணமலை மாவட்டத்தில் அதிக தமிழ் வாக்குகள் கொண்ட இடமாக பட்டணமும் சூழலும் பிரதேசம் அமைந்துள்ளது இம்முறை தமிழ் மக்களின் வாக்குகள் பிரிந்து செல்லக் கூடாது அதனை நாங்கள் எவ்வாறான விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்முறை அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார். 

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் கிளை தலைவர் எஸ், குகதாசன்  செயலாளர் டாக்டர் ஜெயா மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget