ஊரடங்கை ஒரேடியாக நீக்குவது ஆபத்து! புலனாய்வுத்துறை எச்சரிக்கை!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை ஒரேடியாக நீக்கினால், பேராபத்து ஏற்படலாம் என்று, அரச புலனாய்வு பிரிவினர், சுகாதார அமைச்சை எச்சரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே படிப்படியாக ஊரடங்கை தளர்த்தவே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, வரும் 11ம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.