உள்ளூர் துப்பாக்கியுடன் திருமலையில் இளைஞர் கைது!

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் இன்று (17)  இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நன் ஹாமிகே இஷார டில்ஷான் (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

உள்ளூர் துப்பாக்கியை பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாக  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இவர் தொடர்பில் பொலிஸார்  கவனம் செலுத்தி வந்தனர். 

இந்நிலையில் இவர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடுவதற்காக காட்டுப் பகுதிக்குச் செல்லும் போது  இவரை கைது செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,இவர் தொடர்பில் முன் குற்றங்கள்  ஏதாவது இருக்கின்றனவா என விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்  கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget