ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் யானை தாக்கி மரணம்



(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-எத்தாபெந்திவெவ பகுதியில் ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான  டபிள்யூ.தஸநாயக்க (63வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கதுருவெவ  எனும் இடத்திலுள்ள வயலுக்கு துப்பரவு செய்வதற்கு சென்ற போது யானை தாக்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளதாகவும், மாலையாகிய போது வீட்டுக்கு வராததை அடுத்து வயலுக்குச் சென்று பார்த்தபோது யானையின் தாக்குதலினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்தில் இருப்பதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget